முடங்கும் அமெரிக்கா ; விமான நிலையங்களின் அதிரடி முடிவு
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான நிதி முடக்கத்தால் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அடுத்தவருடத்திற்கான நிதியை விடுவிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரச துறைகள் முடங்கியுள்ளன.

கட்டாய விடுப்பு
அதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய துறையில் பணிபுரியும் சுமார் 7 இலட்சம் பேர் ஊதியமின்றி வேலைபார்க்கும் நிலையில் உள்ளனர்.
இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால், இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டது.
மேலும், ஊதியமின்றி குறைந்தளவிலான ஊழியர்களுக்கு கட்டளையிடப்பட்டாலும், அவர்களும் உடல்நலனைக் காரணங்காட்டி விடுப்பு எடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைக் குறைத்ததால், 1,200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிக்காகோ, ஹூஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
இதனால், இலட்சக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர். சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 பாதுகாப்புச் சோதனை ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.