கல்கரியில் அதிகாலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம்
கல்கரியில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் பிளாஸா பகுதியில் வைத்து குறித்த நபர் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் இருந்த குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான இருவரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் சடலம் குறித்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கத்தி குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.