காபூலில் 10 பொதுமக்கள் பலி! பகிரங்க மன்னிப்பு கோரிய அமெரிக்க தளபதி
ஆப்கானிஸ்தான் கபூலில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பொது மக்கள் உயிரிழந்தாக பென்டகன் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்த சம்பவத்திற்காக அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆகஸ்ட் 29 ஆம் திகதி இஸ்லாமிய அரசு தற்கொலைப்படை தாக்குதலை குறிவைத்து அமெரிக்கா வின் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் தொடர்பான அமெரிக்க மத்திய கட்டளையின் விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளில் உயிரிழந்தவர்கள் எவரும் இஸ்லாமிய அரபு பேராளிகள் அல்ல என்றும், அவர்கள் பொது மக்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தியதுடன், தவறுதலாக இடம்பெற்ற அந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா சார்பில் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
தலிபான்கள் திடீரென ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட்டிருந்தது.