பத்து பேரின் உயிர்களை காவு கொண்ட 18 வயது இளைஞன் கொடூர தாக்குதல்
நியூயோர்க்கின் பபலோவில் 18 வயதான இளைஞன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடியொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது, இராணுவ உடையணிந்த இளைஞன், ஹெல்மட்டில் கமரா ஒன்றையும் பொருத்திக்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளான்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூடு நடாத்துவதனை நேரலையாக ஒளிபரப்புச் செய்திருந்தார் எனவும் இரண்டு நிமிடங்களின் பின்னர் இந்த நேரலை நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளையின இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், பெரும்பாலும் கறுப்பினத்தவர்கள் கூடும் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதினொரு கறுப்பினத்தவர்கள் மற்றும் இரண்டு வெள்ளையினத்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலின் பின்னர் இளைஞன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளான்.
இனக்குரோத அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.