அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் 10 பேர் பலி
கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பப்பலோ சூப்பர் மார்க்கெட்டுக்கு காரில் வந்து இறங்கிய கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக 50 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 8 பேரும் 2 அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அங்கிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் தடுத்ததால் அதிகமான உயிர்ப் பலி தடுக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் இளைஞரை கைது செய்தனர். கைதானவரின் பெயர் பெய்டன் ஜென்ட்ரான்(18) தான் படுகொலை செய்தபோது கறுப்பின சமூகத்தை குறிவைத்ததாகவும் ஜென்ட்ரான் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக நியூயார்க் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கவச உடை அணிந்து சனிக்கிழமை அன்று அங்காடிக்கு வந்த நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அத்துடன் அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட கேமரா உதவியுடன் இதனை அவர் சமூகவலைதள பக்கத்தில் நேரலையும் செய்தார். இனவெறி நோக்கத்திலே இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட தகவல்களில் யூத எதிர்ப்பு, இனவெறி தொடர்பான வெள்ளை அறிக்கைகள் இருந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேகநபர், தனது ஊரில் இருந்து 300 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து இந்ததாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
