100 கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர் கடைசியில் பொலிசாரிடம் சிக்கினார்
கல்கரியில் 100 கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கடைசியில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
குறித்த நபர் மீது 3 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள குற்றச்சாட்டு அனைத்திற்கும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
ஜஸ்டின் டெய்லர் ஹார்ட்லேண்ட் என்ற அந்த 38 வயது நபர், சிறையில் இருந்து விடுதலையாகி 6 நாட்களில் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மார்ச் 24ம் திகதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதே வேளை ஹார்ட்லேண்ட் மீது 100 கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.
மே 22ம் திகதி ஹார்ட்லேண்ட் கைது செய்யப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டதாக வழக்குப் பதியப்பட்டார்.
மட்டுமின்றி அவர் மீது 100 குற்றச்சாட்டுகளில் கல்கரி பொலிசாரால் வழக்குப் பதியப்பட்டது.