நாடொன்றில் இந்த மாதத்தில் சுமார் 120 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் தினசரி எண்ணிக்கை, உலக அளவில் ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று மாத்திரம் அங்கு சுமார் 1,100 பேர்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பிரேசிலில் பதிவான உச்ச எண்ணிக்கையைக் காட்டிலும் அது அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தோனேசியாவில் இம்மாதம் சுமார் 120 மருத்துவர்கள் கோவிட்-19 தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளதாக, முன்னணி மருத்துவச் சங்கம் ஒன்று குறிப்பிட்டது.
நிலைமை மோசமடைந்தால், மருத்துவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 95 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தோனேசிய மருத்துவர்கள் Sinovac தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது..
இவ்வாறன நிலையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு Moderna தடுப்பூசியைப் போடுவது குறித்து அதிகாரிகள் பரீசிலிக்கின்றனர்.