கனடாவில் புதிதாக 15 பேருக்கு Omicron மாறுபாடு கண்டுபிடிப்பு! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
கனடாவில் 15 பேருக்கு Omicron வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றும் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர்.
இன்னும் கொரோனாவிற்கே ஒரு முடிவு கிடைக்காத சூழலில் கொரோனாவில் உருமாறி புதிய வகை வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதல் முதலாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஜப்பான், அமெரிக்க போன்ற 38 நாடுகளில் பரவியுள்ளது. சில நாட்களாகவே கனடாவில் கொரோனா புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த நிலையில் கனடா முதல் Omicron பாதிப்பை உறுதி செய்தது.
இதையடுத்து கனடா சுகாதாரத்துறை கூறியதாவது, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.