லண்டனின் 16 வயதுச் சிறுவனை கத்தியால் கொடூரமாக தாக்கிய 15 வயது சிறுவன்!
லண்டன் குரோய்டோனின் ஷ்ரப்லேண்டு பகுதியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் 16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனை அடுத்து மருத்துவர்களால் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில் நேற்று இந்த சம்பவத்தின் தொடர்பாக 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,
முதல் கட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அடுத்த கட்ட விசாரணையில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.