யாழில் 15 வயது சிறுமிக்கு இரு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!
யாழில் 15 வயதுச் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் (30) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயது சிறுமியிடம் பெற்றப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் உள்ள வீட்டுக்குள் இரு தினங்களுக்கு முன் சிறுமியை அழைத்து சென்று தகாத முறையில் இரு இளைஞர்கள் நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கபட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்து அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 24 வயதுடைய இரு சந்தேக நபர்களை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸார் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் இருவரும் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.