கனடாவில் பெருமளவு விளையாட்டுப் பொருட்களை திருடிய நபர்கள் மீது வழக்கு
கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள கடைகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஜெலிகெட் மென்மையான பொம்மைகள் திருடப்பட்ட சம்பவத்தில் இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் ஒன்டாரியோ மாநிலத்தின் குயெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் 2025 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
அப்போது அதிகாரிகள் அவரது இல்லத்தில் இருந்து 140 ஜெலிகெட் பொம்மைகளை மீட்டனர்.

அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 7,500 கனேடிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டது.
பெப்ரவரி 13ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டன. ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரை, குறித்த பெண் ஒருவர் ஒரு ஆண் நபருடன் இணைந்து சுமார் 300 ஜெலிகெட் பொம்மைகளை — மொத்த மதிப்பு 15,000 கனேடிய டொலர்களுக்கு மேல் — திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் வாட்டர்லூ பிராந்தியம், குயெல்ஃப், பர்லிங்டன், மில்டன், ஜார்ஜ்டவுன், ஓக்வில்லே மற்றும் ஓரன்ஜ்வில்லே உள்ளிட்ட 17 வணிக நிறுவனங்களில் இடம்பெற்றதாகவும், மொத்தம் 34 திருட்டுகள் இந்த இருவருடன் தொடர்புடையதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், திருடப்பட்ட Jellycat பொம்மைகள் பெயர் குறிப்பிடப்படாத ஆன்லைன் வாங்கி–விற்கும் தளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துளள்னர்.
இதேவேளை, கிச்சனர் நகரத்தைச் சேர்ந்த 43 வயதான ஆண் ஜனவரி 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.