விமான நிலையத்தில் 16 நாட்களாக பயணப் பொதியை தேடி அலையும் நபர்
கனடாவின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தில், நபர் ஒருவர் 16 நாட்களாக பயணப் பொதியை தேடி அலைந்து வருகின்றார்.
ரொறன்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கி 16 நாட்கள் கடந்தும் தனது பயணப் பொதியை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கல்கரியிலிருந்து கடந்த 17ம் திகதி நேரடியாக ரொறன்ரோ வந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் விமான நிலையத்திற்கு வந்து பயணப் பொதிகளை தேடிப் பார்த்த போதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பயணப் பொதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் இதுவரையில் உரிய பதில் எதனையும் வழங்கத் தவறியுள்ளதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
பியர்சன் விமான நிலையத்தில் கடுமையான நெரிசல் நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.