பயனர்கள் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்: 16 பில்லியன் தரவுகள் திருட்டு
இணைய பாதுகாப்பை சோதிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிலான பெரும் தரவுத் திருட்டுச் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் பயனர்கள் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு சைபர் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
30 பெரிய தரவுத்தளங்களை ஆய்வு செய்தபோது, அதில் 16 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர் கணக்குகள் மற்றும் கடவுச்சொற்கள் களவாடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
பயனர்களுக்கு ஆபத்து
இந்த கணக்குகள் அனைத்தும் முக்கிய இணையதளங்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசுத் துறைகள், ஆபிள், கூகுள், பேஸ்புக், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், நெட்பிலிக்ஸ், பேய்பால், ரொலொபொக்ஸ், மைக்ரோசொப்ட் உள்ளிட்ட பல இணைய தளங்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளன.
மில்லியன் கணக்கான பயனர்களின் நிஜமான பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், மின்னஞ்சல் முகவரிகள் இதில் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது.
இது அரசாங்க தகவல்களையும் உள்ளடக்கியிருக்கலாம் எனவும், சுமார் 29 நாடுகளின் அரசாங்க இணைய தள முகவரிகளின் தரவுகள் களவாடப்பட்டிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் 5.5 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த தரவுத் திருட்டு பெரும் எண்ணிக்கையிலான பயனர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பயனர்கள், அனைத்து கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுங்கள், இரட்டைக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு (2FA) இயக்கு, சந்தேகமான மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் இது சாதாரண தரவு திருட்டு அல்ல எனவும் பயனர்கள் நேரடியாக தாக்கப்பட வாய்ப்பு அதிகம் எனவும் இது ஒரு சைபர் குற்றவாளியின் கனவுப் பட்டியலாகும் எனவும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 47 கிகா பைட் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.