பிரபல கிரிக்கெட் வீரர் மீது 17 வயது ரசிகை பரபரப்பு புகார்!
சந்தீப் லமிச்சனே(Sandeep Lamichane)என்பவர் நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர்.
இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப்(Sandeep Lamichane) விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே(Sandeep Lamichane) மீது 17 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21ம் திகதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு(Sandeep Lamichane) அழைத்து துஷ்பிரயோகம் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தீப்(Sandeep Lamichane) மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். சந்தீப் கரபியன் (Sandeep Lamichane)பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை(Sandeep Lamichane) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்தது.
இது குறித்து சந்தீப் லமிச்சனே(Sandeep Lamichane) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தன் மீது சுமத்தப்பட்ட துஷ்பிரயோகம் புகார் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்து உடல்நலம் குன்றி இருப்பதாக சந்தீப் லமிச்சனே தெரிவித்திருந்தார்.
மேலும் தான் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், விரைவில் நலம் பெற்று நேபாளம் திரும்பி குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் என்றும் சந்தீப் லமிச்சனே(Sandeep Lamichane) கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறினார்.