பெற்றோரை கொன்று அவர்கள் பணத்தில் டிரம்பை கொலை செய்ய துணித்த 17 வயது மாணவன்!
அமெரிக்காவில் பெற்றோரை கொன்று அவர்கள் பணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொலை செய்ய திட்டமிட்ட 17 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவில் Nikita Casap என்னும் 17 வயது மாணவன், தனது பெற்றோரை கொலை செய்து, பிணத்தை வீட்டில் போட்டு விட்டு, எதுவுமே நடக்காதது போல 3 நாட்களாக பள்ளிக்கூடம் சென்று வந்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட வீதியில் சிக்கிய மாணவன்
கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் இருந்த பணத்தை எடுத்து £10,000 ஆயிரம் பவுண்டுகளை தன்வசமாக்கியுள்ளான். அதன் பின்னர் அப்பாவின் காரை எடுத்துக் கொண்டு, 800 மைல் தொலைவில் உள்ள கான்சாஸ் மாநிலம் சென்றுவிட்டான்.
இந்நிலையில் , அவனது தந்தையின் தாயார் (பாட்டி) தனது மகன் தன்னை 7 நாட்களாக தொடர்புகொள்ளவில்லை என பொலிசாருக்கு அறிவிக்க. விரைந்து சென்ற பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்றவேளை, 2 பிணங்கள் அழுகிய நிலையில் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனையும் காரையும் காணவில்லை. இதனால் மகன்(Nikita Casap) மேல் சந்தேகம் கொண்ட பொலிசார் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்கள்.
இதனையடுத்து கான்சஸ் மாநிலத்தில் அவர் ஒரு வீதியில் செல்லும் வேளை, தடைசெய்யப்பட்ட ஒரு வீதியில் சென்றதால் அவரை பொலிசார் மறித்து விசாரித்தவேளை Nikita Casap மாட்டிக் கொண்டார்.
அவரது வீட்டில் காணப்பட்ட சில தகவல் அடங்கிய புத்தம் , பொலிசாருக்கு புதிராக இருக்கவே, அவர்கள் FBI ஏஜண்டுகளை அழைக்க அவர்கள் பார்த்தவேளை. அமெரிக்க ஜனாதிபதியை எப்படி கொலை செய்ய வேண்டும் என்ற குறிப்புகளை எழுதி வைத்திருந்துள்ளார் Nikita Casap .
அதோடு Nikita Casap ஒரு சிறிய குழுவோடு அவர் தொடர்பில் இருந்துள்ளார். அந்தக் குழுவில் இருக்கும் ஏனைய நபர்களும் அதிபர் டிரம்பை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதிச்சியடைந்த பொலிசார் மற்றும் FBI ஏஜண்டுகள் பெரும் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் இறங்கிய நிலையில் அந்தக் குழு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து தற்போது டொனால் ரம்புக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.