ரொறன்ரோவில் கொள்ளை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் இருவர் கைது
ரொறன்ரோ நகர மையத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் மிரட்டல் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்றாவது நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி மாலை 4.30 மணியளவில், அடிலெய்ட் மேற்கு வீதி Adelaide Street West மற்றும் பீட்டர் வீதி Peter Street அருகே அமைந்துள்ள என்டர்டெயின்ட்மன்ட் Entertainment District பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர், “நினா”, “நினா லோபெஸ்” மற்றும் “சப்ரீனா” என்ற பெயர்களில் Snapchat-ல் இருந்து ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு, அந்த பெண் மற்றும் இரு ஆண்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, பணம் பறிக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி, காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மொன்ட்ரியால் நகரைச் சேர்ந்த 30 வயதுடைய ஜூலியா வாலியன்டே, மற்றும் மிசிசாகா நகரைச் சேர்ந்த 20 வயதுடைய சலீம் அப்துல்லா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாவது சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. போலீசார் அவரைப் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளனர்:
இதேபோன்ற சம்பவங்களில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். மேலும் தகவல் உள்ளவர்கள் 416-808-5200 என்ற எண்ணில் அல்லது குற்றத் தடுப்ப Crime Stoppers இணையதளத்தில் மறைமுகமாக தகவல் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.