டொரண்டோ கத்தி குத்து சம்பவத்தில் இருவர் காயம்
டொரண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பிளஃபர்ஸ் பார்க்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 6 மாலை 7:30க்கு பிளஃபர்ஸ் பார்க் சாலை மற்றும் பிரிம்லி சவுத் சாலையின் அருகிலுள்ள பூங்காவில் பலர் கத்திக்குத்து காயங்களுடன் இருக்கிறார்கள் என்ற தகவலை பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, இரு ஆண்கள் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப நிலையில் விசாரணை
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு அதிகாரிகள் தெரிவித்ததாவது, அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்திற்கு காரணமான சூழ்நிலைகள் இதுவரை தெரியவில்லை.
“இந்த விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களோ, காட்சி வீடியோக்களோ உள்ளவர்கள் டொரண்டோ பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.