டொராண்டோவில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்
டொராண்டோவில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர்.
டொராண்டோவின் பாத்தர்ஸ்ட் தெரு மற்றும் வில்சன் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாலை 1:09 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், சந்தேக நபரைத் தடுத்துக் கைது செய்ய முயன்றபோது அவர் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இருவரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து டொராண்டோ காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.