சந்தேக நபரைக் பிடிக்க முயன்றபோது வாகனம் விபத்து – இரு அதிகாரிகள் காயம்!
கனடாவின் வடக்கு யார்க் (North York) பகுதியில் சந்தேக நபர் ஒருவரைத் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட வாகன விபத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு பின்ச் அவென்யூ வெஸ்ட் (Finch Avenue West) மற்றும் சென்டினல் ரோடு (Sentinel Road) சந்திப்பு பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் ஒருவரின் வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயன்றபோது, அந்த நபர் வாகனத்திலிருந்து இறங்கித் தப்பியோடினார்.

தப்பியோடியவரைத் துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது, அதிகாரிகளின் வாகனம் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சிக்கிய இரண்டு அதிகாரிகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக முதலுதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தப்பியோடிய 31 வயது மதிக்கத்தக்க நபர் அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகளிடமிருந்து தப்பித்தல், அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்துதல், 5,000 டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள திருட்டுச் சொத்துக்களை வைத்திருத்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.