இந்திய பெண் என்பதால் சீரழிக்கப்பட்ட 20 வயது இளம்பெண் ; வெளிநாடொன்றில் அரங்கேறிய கொடூரம்
இங்கிலாந்தின் வெஸ்ட்மிட்லாண்ட்ஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை 30 வயதுடைய வெள்ளையின இளைஞர் ஒருவர் இன ரீதியாக இந்திய பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சி.சி.டி.வி. காட்சிகள்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வால்சாலின் பார்க் ஹால் பகுதிக்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பொலிஸார் சேகரித்தனர்.
இதில் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்