20 வயது சீரியல் கில்லர் ...160 ஆண்டுகள் சிறை தண்டனை : வெளியான அதிர்ச்சிகரமான தகவல்கள்
கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சீரியல் கில்லர் வீலர் வீவரை 5 வருடம் கழித்து தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த நபர் தா சாரா பட்லர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது தாயின் மினிவேனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவள் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சாரா சமூக வலைத்தளத்தில் வீலர் வீவருடன் நாட்டப்பக பழகியுள்ளார். காணாமல் போன அன்றைய தினத்தில் தான் சாரா வீலரை சந்திக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் வீலர் சாராவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான். அதன் பின்பு சாராவின் உடல் ஈகள் ராக் காட்டிலிருந்து 10 நாட்களுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக சாரா காணாமல் போன ணடரய தினத்தில் அவளது தோழி மற்றும் சாராவின் சகோதரி ஆகியோரை சாராவின் சமூகவலைத்தலை ஆராய்ந்துள்ளனர். அப்போது சாரா கடைசியா உரையாடிய நபரை கண்டுபிடித்துள்ளனர். பிறகு சாராவின் தோழி புது பெயரில் அக்கவுண்ட்டை தொடங்கியுள்ளார். அதனையடுத்து தோழிக்கும் வீலரிடமிருந்து மெசேஜ் செய்துத்துள்ளார்.
இதனையடுத்து தோழி ரிவர் வீலரை சந்திக்க முடிவு செய்தால். இந்த சமயத்தில் தான் வீலர் தனது காரில் வந்து இறங்கினார். அப்போது சந்தேகித்த பொலிஸார் வீலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சாராவின் உடல் கிடைக்காத காரணத்தால் வீலரை பொலிஸார் விட்டுவிட்டனர். இந்த சூழலில் சம்பவம் நடந்த 10 நாட்கள் கழித்து சாராவின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் வீலர் மீது இருந்த சந்தேகத்தை பொலிஸார் உறுதி செய்தனர். வீலர் தோற்றத்தில் அழகாக இருந்துள்ளார். இவர் குறிப்பாக சில குறிப்பிட பெண்களை குறிவைத்து கொலை செய்துள்ளார். மேலும் அந்த பெண்களை தூங்க வைப்பதற்காக ஆன்லைனில் அனஸ்தீசியா மயக்கமருந்தை வாங்கியுள்ளார். வீட்டிலேயே செய்யப்பட்ட விஷத்தையும் பயன்படுத்தியுள்ளார்.
வெஸ்ட் என்ற பெண்ணை துன்புறுத்தி அவள் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். யாருமில்லாத ஒரு வீட்டில் அந்த உடலையும் வீசிச்சென்றுள்ளார். வீசப்பட்ட அவரது உடல் பாகங்கள் முழுவதும் கருகியிருந்தது. பற்களை வைத்துதான் இன்னாரின் உடல் என்பதே அடையாளம் காணப்பட்டது. சாராவை வீலர் கொள்வதற்கு முன்பாக டெய்லர் என்ற பெண்ணை கொல்லத்தான் வீலர் முடிவு செய்திருந்தான்.
ஆனால் டெய்லர் எப்படியோ அவனிடமிருந்து தப்பியுள்ளார். இந்த நிலையில் தான் வீலர் சாராவை கொலை செய்துள்ளான்.
2016ல் சாராவின் சகோதரியும் அவளது 2 நண்பர்களும் சாராவுன் சமூக வலைதளங்களைப் பார்த்து சாரா கடைசியாக பேசிய ஆளை அடையாளம் கண்டு பொலிஸில் சிக்கவைத்தனர்.
அதிலிருந்து ஒவ்வொரு கொலைக்கும் துப்பு துலக்கினர் பொலிசார் .
இதையடுத்து தற்போது வீவருக்கு 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.