2050 க்குள் சுமார் 500 கோடி மக்கள் தண்ணீருக்கு திண்டாடுவர்...வெளியான தகவல்
உலகளவில் வருகிற 2050க்குள் சுமார் 500 கோடி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
'தண்ணீருக்கான 2021ம் ஆண்டு காலநிலை சேவைகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள தகவலானது, கடந்த 20 ஆண்டுகளாக 1 செமீ அளவில் மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல்,நிலப்பரப்பின் நீர் குறைபாடு, நீர் சேமிப்பின் குறைவு ஆகியவை நிகழ்ந்துள்ளன.
மேலும் பருவநிலை மாறுபாட்டால் தண்ணீர் தொடர்பில் உருவாகும் பேரிடர்களான பெருவெள்ளம்,பஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட இன்னல்களும் வருங்காலத்தில் ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உள்ளதாகவும் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தண்ணீர் சேமித்து வைத்தல் மற்றும் தூய்மையாக வைத்தல் ஆகிய இரண்டிலும் மிகவும் மோசமாக உலகம் செயல்பட்டு வருகிறது.
அதன் காரணமாக புது புது ஆபத்துகளும் உருவாகி வருகின்றன. தற்போது உலகில் உள்ள தண்ணீரில் வெறும் 0.5 தண்ணீர் மட்டுமே அசுத்தமில்லாத தூய நீராக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 360 கோடி மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளார்.
இதே சூழல் தொடர்ந்தால் வருகிற 2050ம் ஆண்டுக்குள் சுமார் 500 கோடி மக்கள் இதே பஞ்சத்தை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த சூழல்களை தவிர்க்க ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.