ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்டது.
உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது.
மறுபுறம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளது.