ஒரே நாளில் 222 பேர் பலி; பிரான்ஸை விடாது துரத்தும் கொரோனா
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 21,712 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 222 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் .
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந் நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில்21.712 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 222 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 26,985 பேர் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 273 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸில் இதுவரை கொரோனா இறப்பு எண்ணிக்கை 105,850 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.