மியான்மரில் 23 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு
மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு தினத்தையொட்டி, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 23,000-க்கும் மேற்பட்ட கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனா்.
எனினும், விடுவிக்கப்பட்ட கைதிகளில் மியான்மா் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கைது செய்யப்பட்டவா்களும் அடங்கியுள்ளனரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மியான்மர் அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி தொலைக்காட்சி தெரிவிக்கையில்,
திங்கியான் புத்தாண்டு தினத்தையொட்டி, 23,047 சிறைக் கைதிகளுக்கு ராணுவ அரசின் தலைவா் மின் ஆங் லயிங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். இதுதவிர, மேலும் சில கைதிகளுக்கான தண்டனையையும் குறைத்து அவா் உத்தரவிட்டுள்ளாா் என தெரிவித்தது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது.
அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மியான்மா் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 700-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தற்போது விடுவிக்கப்பட்ட கைதிகளில், அவா்களும் அடங்கியுள்ளனரா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.