மரியுபோலில் 3,000 கல்லறைகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்
உக்ரைன் - புச்சாவில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான வெளிப்படையான சான்றுகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
அந்த வகையில், மரியுபோலிலும் குறைந்தது 3,000 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கீவ் நகருக்கு வெளியே, மரியுபோல் இன்னும் பெரிய அளவில் அட்டூழியங்களுக்கு ஆளானதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy0 கூறியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் தெற்கு துறைமுக நகரத்தின் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டினால், அதன் குடியிருப்பாளர்களின் அவல நிலையைப் பற்றி அறிக்கையிடுவதற்கான அணுகலைப் பெறுவதற்கு மிகச் சில பத்திரிகையாளர்களாலேயே முடிந்தது.
அந்த வகையில், பிரெஞ்சு தொலைக்காட்சி குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், சுமார் 3,000 கல்லறைகளைக் கொண்ட ஒரு இடம் காட்டுவதாகக் கூறுகிறது.
அதேசமயம் இந்த செய்தி உண்மை என உறுதிசெய்யப்பட்டால், ரஷ்யப் படைகளின் தாக்குதலில் மிகவும் ஆபத்தான இனப்படுகொலை இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.