கனடவில் வணிக வளாகத்திற்குள் போலி துப்பாக்கிகளுடன் நுழைந்த சிறுவர்கள் கைது
கனடாவின் ஓஷாவா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான ஓஷாவா சென்டரில் (Oshawa Centre), போலி துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 12, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 8 மணியளவில், வணிக வளாகத்தின் பாதுகாப்புப் பிரிவினர் மூன்று சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் இருப்பதைக் கவனித்தனர்.
இது குறித்து உடனடியாக டர்ஹாம் பிராந்திய போலீஸாருக்கு (Durham Regional Police) தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தந்திரோபாய ஆதரவுப் பிரிவு (Tactical Support Unit) மற்றும் முன்கள அதிகாரிகள், அந்த மூன்று சிறுவர்களையும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாகக் கைது செய்தனர்.
சிறுவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு போலி துப்பாக்கிகள் (Imitation Firearms) கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மூவரும் நிபந்தனையற்ற முறையில் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எனினும், அவர்கள் அந்த வணிக வளாகத்திற்குள் (Mall) நுழையத் தடை விதிக்கும் அத்துமீறல் அறிவிப்புகள் (Trespass notices) முறையாக வழங்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி போன்ற தோற்றம் கொண்ட பொருட்களை பொது இடங்களில் கொண்டு வருவது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.