34 வயதான உகாண்டா அரசர் காலமானார்; காரணம் வெளியாகவில்லை!
உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார். ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார்.
உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது.

இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை
அவர்களின் அரசியல் அதிகாரம் பெரிதும் அடையாளமானது, ஆனால் அவர்கள் மகத்தான கலாசார மற்றும் சமூக தாக்கத்தை கொண்டுள்ளனர். ஓயோ நியம்பா (Oyo Nyimba) கபாம்பா இகுரு ருகிடி IV, காங்கோ ஜனநாயக குடியரசு எல்லையின் அருகே உகாண்டாவின் மேற்கில் உள்ள ஒரு சிறிய இராஜ்ஜியமான டோரோவின் மன்னனாவார்.
"டோரோவின் ஓமுகாமா, மன்னர் ஓயோ நியம்பா கபாம்பா இகுரு ருகிடி IV இன் மறைவை ஆழ்ந்த சோகத்தோடும் கனத்த இதயத்தோடும் அறிவிக்கிறேன்" என்று ராஜ்ஜியத்தின் பிரதமர் கால்வின் ஆம்ஸ்ட்ராங் ரூமிர் அகிகி எக்ஸ் (X) தளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவிட்டுள்ளார்.
மன்னர் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணி அளவில் காலமானார் என்று அகிகி கூறினார், இருப்பினும் அவர் இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை.
அவரது தந்தை ருபிரபாசாய்ஜா பேட்ரிக் டேவிட் மேத்யூ கபோயோ ஒலிமி III இன் மறைவுக்குப் பிறகு, ருகிடி IV செப்டம்பர் 12, 1995 அன்று வெறும் மூன்று வயதில் முடிசூட்டப்பட்டார்.