இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கனமழை! திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் 4 பேர் பலியான சோகம்
இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் பொதுவாகவே நவம்பர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2014ஆம் வருடத்தில் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது நிலச்சரிவில் மாட்டி 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி கொண்டு நான்கு நபர்கள் பலியானதாகவும் ஒரு நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மாயமானவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.