பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,641 பாதிப்பு; 225 பேர் பலி
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 45,641 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,24,087 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கொரோனாவால் மேலும் 225 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் மொத்த எண்ணிக்கை 93,378 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,86,607 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 40,44,102 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. அதோடு தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.