உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி தவிக்கும் 47 தொழிலாளர்கள்.., மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரகாண்ட் பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்
இந்திய மாநிலமான உத்தரகாண்ட், சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
இதில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 10 தொழிலாளர்கள் ராணுவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 47 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மணா கிராமமானது இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது. பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களின் மீது பனிப்பாறைகள் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை பொலிஸ் விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |