இஸ்ரேலில் குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா.. 5 முதல் 11 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி
இஸ்ரேலில் அதிகமாக குழந்தைகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதால் அந்நாட்டு அரசு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகின்றது. கொரோனாவுக்கு எதிராக அனைவரின் நம்பிக்கையாய் இருப்பது தடுப்பூசி மட்டுமே. இதனால் உலக நாடுகள் வேகமாக தங்களது மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் நாடு இஸ்ரேல். இங்கு முதல் அலை தாக்கிய போதே அந்நாடு அரசு தங்களது மக்களுக்கு வேக வேகமாக தடுப்பூசி செலுத்திவிட்டனர்.
இதையடுத்து சில நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவித்தனர். ஆனால் கோடை காலத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கூட கொரோனாவால் தாக்கப்பட்டனர்.
இதற்கிடையில் குழந்தைகளை குறி வைத்து கொரோனா தாக்கி வருவதால் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நஃப்டாலி பென்னெட் கூறியதாவது, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்கள் நாட்டில் பதிவாகும் தொற்றில் பாதி எண்ணிக்கை குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். அதுவும் குறிப்பாக 11 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. இதனால் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.