இஸ்ரேலில் புதிதாக 7 பேருக்கு Omicron மாறுபாடு கண்டுபிடிப்பு
இஸ்ரேல் நாட்டில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அதன் பின் உலகளவில் கொரோனா படிப்படியாக குறைந்தாலும் ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா உச்சத்தை அடைந்து வருகின்றது.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 7 பேருக்கு Omicron வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் 27 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் நாட்டு அரசு நோய் பரவாமல் இருக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன் முதலில் எல்லைகளை மூடியுள்ளது. இஸ்ரேல் நாட்டினர் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.