உக்ரைனில் கொல்லப்பட்டுள்ள 7 ஆயிரம் அப்பாவி மக்கள்! ஐ.நா அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24-ம் திகதியில் இருந்து ரஷ்யா போரை தொடங்கியது. 10 மாதங்களை கடந்து நீண்டு வரும் இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
போர் தொடங்கிய பெப்ரவரி 24-ம் திகதியில் இருந்து கடந்த 26-ம் திகதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 6,884 பேர் கொல்லப்பட்டனர், 10,947 பேர் காயமடைந்தனர்.
இது தவிர ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 483 பேர் கொல்லப்பட்டனர். 1,633 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.