கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 வயது சிறுமி
ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக தென் ஆப்ரிக்கா சென்றவர்கள் பயணித்த பேருந்து 165 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் உயிரிழந்த நிலையில் 8 வயதான சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக போட்ஸ்வானாவில் இருந்து 46 பேர் தென் ஆப்ரிக்காவின் மோரியா நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.
லிம்போபோ மாகாணத்தில் உள்ள மலைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் வழியாக பேருந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் 8 வயது சிறுமியை தவிர பேருந்தில் சென்ற 45 பேரும் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.