அதிர்ச்சி சம்பவம்! பெட்ரோல் டேங்கர் மீது பஸ் மோதி கோர விபத்து.. 91 பேர் பலியான சோகம்
ஆப்ரிக்காவில் பெட்ரோல் டேங்கர் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் ஆயில் டேங்கர் ஒன்று பஸ் மீது மோதியதை தொடர்ந்து வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி சுமார் 91 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையை குறித்து அரசு உறுதி செய்யவில்லை.
ஆயில் டேங்கர் வெடித்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
Dozens of people are feared dead after a gas station exploded on Friday night in the eastern surbub of #Freetown #SierraLeone, rescue efforts continue pic.twitter.com/9QdiR6VIFj
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) November 6, 2021
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ ட்வீட் செய்துள்ளார்.