அமெரிக்காவில் கடந்த ஆண்டில் போதைபொருளால் 93,000 பேர் பலி
அமெரிக்காவில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் போதைப் பொருள் பயன்படுத்தியதில் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தேசிய உயிரியல் புள்ளிவிவர அமைப்பின் அறிக்கை இதனை தெரிவித்துள்ளது. அதனபடி வெர்மான்ட், கென்டக்கி, தென் கரோலினா, மேற்கு வர்ஜீனியா மற்றும் கலிபோர்னியாவில் போதைப் பொருள் பயன்படுத்தியதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
ஒபியாய்டு எனப்படும் போதைப் பொருளால் இதுவரை அதிகரித்திருந்த உயிரிழப்பு தற்போது சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் ஃபென்டானைல் என்ற போதைப் பொருளால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள்து.
மேலும் ஃபென்டானைல் பயன்படுத்தியதில் மட்டும் கிட்டத்தட்ட 68 ஆயிரம் பேர் உயிரை மாய்த்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.