ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட முன்வந்த 98 வயதான உக்ரைன் பாட்டி
98 வயதான உக்ரைன் பாட்டி ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்திகதி அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்தது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புடின் கூறினார். உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இந்நிலையில், 98 வயதான உக்ரைன் பாட்டி ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.
98 y.o. Olha Tverdokhlibova, WWII veteran faced a war for the 2nd time in her life.
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) March 18, 2022
She was ready to defend her Motherland again, but despite all the merits and experience was denied, though, because of age. We are sure, she will celebrate another victory soon in Kyiv!#Ukraine pic.twitter.com/jI39RyCCJK
ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா(Olha Tvertoglibova) என்ற 98 வயதான பாட்டி ஒரு போர் வீரர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, ஓல்ஹா தனது தாய்நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தில் சேர முன்வந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது. இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், “இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா(Olha Tvertoglibova) தனது வாழ்க்கையில் 2வது முறையாக போரை எதிர்கொண்டார்.
அவள் மீண்டும் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாள், ஆனால் எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கியேவில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.