98 வயதில் அசாத்திய தன்னம்பிக்கை... குண்டுவீச்சுக்கு மத்தியில் நடந்தே உக்ரைன் தப்பிச் சென்ற மூதாட்டி!
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரி டைன் பகுதியில் இருந்து 98 வயது மூதாட்டி ஒருவர் உக்ரைனுக்கு நடந்தே தப்பிச் சென்றுள்ளார்.
லிடியா ஸ்டெபனிவ்னா என்ற மூதாட்டியே குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார்.
அவரை ராணுவத்தினர் மீட்டு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தான் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.