தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி! பொலிஸார் விசாரணை

Shankar
Report this article
தமிழகத்தில் உள்ள மாவட்டம் ஒன்றில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பெரம்பலூர் - குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த 53 வயதான காமராஜ் என்ற விவசாயியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவ தொடர்பில் தெரியவருவது,
குறித்த விவசாயின் முதல் மனைவி ஏற்கனவே இறந்த நிலையில் தற்போது இரண்டாவது மனைவி சங்கீதாவுடன் வசித்து வந்தார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தில் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காமராஜ் ஒதியம் கிராமத்தில் உள்ள புதுஏரிக்கு சென்று ஆட்டிற்கு தழைகளை கொண்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் புதுஏரி பகுதிக்கு சென்று தேடிப்பார்த்துள்ளனர். அப்போது காமராஜ் ஆலமரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
இது தொடர்பில் சங்கீதா கொடுத்த முறைப்பாட்டின்பேரில் குன்னம் பொலிஸ் உயர் அதிகாரி செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெரம்பலூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.