ஆஸ்திரேலியா மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கொரோனா அதிகரித்த நிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,' ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா குறையத் தொடங்கியுள்ளது' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை.
அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.