ஆசிய நாடு ஒன்றில் குரங்கம்மை அடையாளம்!
சிங்கப்பூரில் வசிக்கும் 45 வயது மலேசிய நபருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்ட நபரிடம் முதன்முதலில் கடந்த வியாழக்கிழமை (30 ஜூன்) அறிகுறிகள் தென்பட்டன. குறித்த நபர் சோர்வு, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் பகுதியில் காயங்கள், உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக அமைச்சு கூறியது.
இதனையடுத்து மருத்துவ ஆலோசனையை அணுகிய அவரிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெறும் அவர் சீரான நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டது.
அதேவேளை ஆசியநாட்டில் குரகங்கம்மை பாதிப்புக்குள்ளான முதல் நபராக குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.