இந்த போன் நம்பரை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: அதிர்ச்சியூட்டும் உண்மை
நாம் வாழும் உலகில் விடையில்லா பல மர்மங்கள் உண்டு, அதில் ஒன்று தான் குறிப்பிட்ட போன் நம்பரை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம் உண்டாம்.
அதாவது, 0888 888 888 என்ற போன் நம்பரை இனி யாருக்கும் வழங்க வேண்டாம் என அறிவித்திருக்கிறது பல்கேரியா அரசாங்கம்.
இதற்கு காரணம் இந்த நம்பரை பயன்படுத்திய மூன்று பேர் மரணமடைந்து விட்டார்களாம்.
முதலில், இந்த போன் நம்பரை அந்நாட்டின் 'Mobitel' எனும் நெட்வோர்க் கம்பெனியின் CEO Vladimir Grashnov என்பவர் வைத்திருந்துள்ளார், இது அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போன் நம்பர்.
இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு Vladimir Grashnov மரணமடைந்து விட்டார்.
அடுத்ததாக, அந்நாட்டின் பிரபல மாஃபியா டானாக வலம்வந்த Konstantin Dimitrov வைத்திருந்துள்ளார்.
பல மில்லியன் யூரோ கணக்கிலான போதைப்பொருளை கடத்திய Konstantin Dimitrov, குறித்த போன் நம்பரை வைத்திருந்த சில நாட்களிலேயே 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார், இது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
தொடர்ந்து, இந்த போன் நம்பரை வைத்திருந்த Konstantin Dimitrov-ன் சகோதரர் Konstantin Dishlievயும் 2005ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனால் சந்தேகம் மேலும் வலுவடைய, அரசாங்கமே இனிமேல் அந்த நம்பரை யாருக்கும் வழங்க வேண்டாம் என அறிவித்து விட்டதாம்.
உண்மையிலேயே மூவரின் மரணமும் ஏதேச்சையாக நடந்ததா? அல்லது குறித்த நம்பரை வைத்திருந்ததால் நடந்ததா? என்பது இன்றுவரை விடையில்லா கேள்வியாகவே இருக்கிறது.