மியன்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
138 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.44 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
மியன்மார் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 7.7 ரிச்டர் மற்றும் 6.4 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததமை குறிப்பிடத்தக்கது