பிரான்ஸில் உணவக உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பிரான்ஸில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு பல தரப்பினரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.
பிரான்ஸில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என பிரான்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் சம்பள உயர்வை வழங்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தாங்கள் சம்பளம் அதிகரிக்கவில்லை என்ற போதிலும் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவுகளை வழங்குவதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கொடுப்பனவுகளை வழங்கி வருவதனால் ஊதியத்தை அதிகரிப்பதென்பது கடினமாக உள்ளதென பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரான்ஸில் உணவக உரிமையாளர்களுக்கே அதிகமான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 5 சதவீத ஊழியர்களின் பற்றாக்குறை எதிர்கொள்வதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பணியாற்றும் உரிமையாளர் வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் மாத்திரமே பணியாற்றுவதாகவும், இது உணவக துறையை அதால பாதாளத்தில் தள்ளும் நடவடிக்கையாகவும் உள்ளதென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் தங்களால் மீண்டு வர முடியாத நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாடு முழுவதம் ஊழியர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவததற்கும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.