வெள்ளை மாளிகை அருகே ஏற்பட்ட விபரீதம்; உயிராபத்தான நிலையில் நால்வர்
அமெரிக்கா- வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நேற்று இரவு 7 மணியளவில் லேபாயேட் சதுக்கம் அருகே திடீரென மின்னல் தாக்கியதில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சதுக்கத்தில் அமைந்துள்ள ஜெக்சன் சிலையின் அருகே அவர்கள் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் அவர்கள் படுக்காயம் அடைந்ததாக கூறப்படுகின்றது. அதேவேளை அப்பகுதியில் தீவிர இடி மற்றும் மின்னல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த விபத்து குறித்து தேசிய மின்னல் அமைப்பு ஆராய்ச்சி குழுவின் நிபுணர் கிரிஸ் வேகாஸ்கி கூறுகையில், வெள்ளை மாளிகை அருகே விபத்து ஏற்பட்ட பகுதியில் 6 ஸ்ட்ரோக் மின்னல் தாக்கியுள்ளது.
அதாவது அதீத மின்சாரம் ஒரே புள்ளியில் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதுவும் அரை வினாடி பொழுதில் இது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த அனர்தம் ஏர்பட்டதாக அவர் கூறியுள்ளர்.