லண்டன் ஓட்டுநர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
லண்டனில் புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வருவதால் லண்டன் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் சைக்கிளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்கள் பயணித்தால் 160 பவுண்ட் அபாராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் போக்குவரத்து சேவை அமைத்துள்ள புதிய போக்குவரத்து சட்டங்கள் எதிர்வரும் நாட்களில் கடுமையாக அமுலுக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.
புதிய சட்டத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு அபராதத்திற்குப் பதிலாக முதலில் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் மாத்திரமே அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் விதிக்கப்படும் அபராதத்தை முதல் 14 நாட்களுக்கு செலுத்தினால் 160 பவுண்ட் அபாராத தொகை 50 சதவீதமான குறைக்கப்பட்டு 80 மாத்திரம் பெறப்படும்.
மேலும் சைக்கிளுக்கான பாதைகள் கார்கள் பயணிக்கின்றதா என்பதனை அவதானிப்பதாற்காக சிசிடீவியின் உதவிகள் பெறப்படும் என லண்டன் மேயர் சாதிக் கான்(Sathik khan) தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தலைநகரின் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் என சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.
சைக்கிள் பாதைகள் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் ஓட்டுவதற்கு மாத்திரமே இனிமேல் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான நடவடிக்கையான இது காணப்படும் என மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் லண்டனில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பான இடமாக கருதப்படும் என அவர் கூறியுள்ளார்.
சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தைப் பாதுகாப்பது அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சைக்கிள் ஓட்டுவதற்கான நம்பிக்கையை மேம்படுத்தவும் வேண்டும் என மேயர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.