தீயில் எரிந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்! தீவிர விசாரணை
இளம்பெண் ஒருவர் தீயில் எரிந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாதான். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கை, கால்கள் செயலற்ற நிலையில் வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இவருடைய மனைவி தெய்வானை சற்று மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.
இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி (வயது 22). இவருக்கும் உரல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 22-ம் திகதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த முத்துலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ காயங்களுக்கு உட்பட்டு துடிதுடித்து குறித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் முத்துலட்சுமியின் பெரியப்பா குப்பன் அளித்த முறைப்பாட்டின் பேரில் உடுமலை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ள உள்ளனர்.