பிரான்சில் பொலிஸிடம் தப்பிய இளைஞன் விபத்தில் சிக்கி சாவு
உந்துருளியில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பரிஸ் 16 ஆம் வட்டார காவல்துறையினர் Porte Maillot பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞன் ஒருவன் உந்துருளி ஒன்றில் அதிவேகமாக பயணித்துள்ளார்.
அவன் மீது சந்தேகம் எழுந்ததால், காவல்துறையினர் அவனை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் பொலிஸாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அந்த வாலிபர் வேகமாக தள்ளிவிட்டு தப்ப முயன்றார். தற்போது அந்த இளைஞனை பொலிஸார் துரத்தி வந்தனர்.
பொலிஸார் தன்னை துரத்துவத்தைக் கண்ட அந்த இளைஞன், அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றான். ஆனால் அந்த வேகம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சில நிமிடங்களில் அந்த இளைஞனுக்கு விபத்து ஏற்பட்டது.