வெளிநாடொன்றில் பாரிய விபத்து சம்பவம்: ஒரேகுடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நேர்ந்த சோகம்
பாலத்தில் இருந்து கார் ஒன்று கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஒரெ குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மேலும் குறித்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 7 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்து இரவு நேரத்தில் இடம்பெற்றதால் யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் நேற்று (02) கார் ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படுவதாக மீட்புக்குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் காரை மீட்டுள்ளனர்.
இருப்பினும் ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 7 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.